ஆசையாக மது வாங்கி, அருந்த சென்ற குடிமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

மது பாட்டிலுக்குள் செத்த தவளை மிதந்த நிலையில் இருந்தது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சத்தீஸ்கர் மாவட்டத்தில், ஆசையாசையாய் மதுகுடிக்க குவிந்த குடிமகன்களில் ஒருவர் வாங்கி இருந்த மதுபாட்டிலுக்குள் தவளை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து சக ‘குடி’மகன்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

பிற மாநிலங்களைப் போலவே சத்தீஸ்கர் மாநிலமும் மது விற்பனையில் களை கட்டியதால் தள்ளாடிக் கொண்டிருந்தது. அம்மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டம், ஹார்டி பகுதி பஜார் தெருவில் இயங்கி வந்த அரசு மதுபானக் கடை ஒன்றில், இளைஞர் ஒருவர் மதுபானத்தை வாங்கி அருந்த சென்ற நிலையில் அந்த பாட்டிலுக்குள் இறந்த தவளையின் உடல் மிதந்து கொண்டிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.

அந்த இளைஞர் இதுகுறித்து முறையிட்டதை தொடர்ந்து வேறு பாட்டில் கொடுக்கப்பட்டது. இது குறித்த வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

இச்சம்பவம் குறித்து அம்மாநில மதுபான கடையின் மேலாளரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, ”மதுபானங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை. எனினும் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

Baskar

Next Post

’அரிப்பை தீர்த்துக் கொள்வதற்கான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்’..!! ’அதைதான் நானும் செய்ய போகிறேன்’..!! - மன்சூர் அலிகான்

Wed Oct 26 , 2022
“அரிப்பை தீர்த்துக்கொள்ள இது ஒரு நிகழ்ச்சி. மேற்கிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற நிகழ்ச்சி” என பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல வில்லனான மன்சூர் அலிகானை, படத்தில் டெரர்ராக பார்த்திருப்போம். இவர் நிஜமாகவே ரொம்ப மோசமானவர் என்றும் சிலர் நினைத்திருப்பார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் இவர் அப்படி கிடையாது. வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர். விக்ரம் படத்திற்கு பிறகு ’சக்கு சக்கு வத்திக்குச்சி’ […]
’அரிப்பை தீர்த்துக் கொள்வதற்கான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்’..!! ’அதைதான் நானும் செய்ய போகிறேன்’..!! - மன்சூர் அலிகான்

You May Like