பிளஸ்2 மாணவனை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளம்பெண்..!! திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், வீட்டில் பெற்றோருடன் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், மாணவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். ஆனால், மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து மகனை காணவில்லை என வெள்ளக்கோவில் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வந்தனர்.


இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், மாணவரிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருப்பிடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி செல்போன் சிக்னல் உதவியுடன் மாணவரின் இருப்பிடத்தை கண்டறிந்து, அங்கு சென்ற போலீசார், மாணவரை மீட்டு அவரை கடத்திச் சென்ற இளம்பெண்ணை கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

மே. வங்கம், ஆந்திரா, பீகார் மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

Mon Apr 17 , 2023
அடுத்த 4, 5 நாட்களில் மேற்கு வங்காளம், பீகார் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, அடுத்த 2 நாட்களுக்கு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வெப்ப அலை நிலைமைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கிம் […]
241c70d0aa7ece315317877f64b16af6e9c0e8091e8b61bef4dfa45af364b659

You May Like