திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், வீட்டில் பெற்றோருடன் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், மாணவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். ஆனால், மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து மகனை காணவில்லை என வெள்ளக்கோவில் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், மாணவரிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருப்பிடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி செல்போன் சிக்னல் உதவியுடன் மாணவரின் இருப்பிடத்தை கண்டறிந்து, அங்கு சென்ற போலீசார், மாணவரை மீட்டு அவரை கடத்திச் சென்ற இளம்பெண்ணை கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.