“ அல்லா என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது..” பிரபல சாமியார் கருத்து…

அல்லா என்ற வார்த்தை பண்டைய சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது என்று சங்கராச்சாரியார் நிஷ்சலானந்த் சரஸ்வதி கூறியுள்ளார்.

வாரணாசியின் கோவர்தன் பூரி மடத்தின் தலைவர் சங்கராச்சாரியார் நிஷ்சலானந்த் சரஸ்வதி இது குறித்து பேசிய போது “ அல்லா என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது.. இது பெண்ணின் சக்தியைக் குறிக்கிறது.. துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்யப் இது பயன்படுகிறது.. ஒவ்வொரு இந்தியனும் கடந்த காலத்தில் ‘வேத’ ஆரியனாக இருந்தனர். உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது.. அது இந்து சனாதன தர்மம்.. மற்ற மதங்கள் அனைத்தும் வெறும் பிரிவுகள் தான்.. மதத்தின் மீது கேள்வி எழுப்புபவர்கள் முதலில் சமஸ்கிருத இலக்கணத்தை கற்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

‘அல்லா’ மற்றும் ‘ஓம்’ இரண்டும் ஒன்றே என்ற மௌலானா சயீத் அர்ஷத் மதனியின் கருத்தையும் நிஷ்சலானந்த் சரஸ்வதி சாடினார். மேலும் பண்டிட் திரேந்திர சாஸ்திரியை அவர் ஆதரித்து பேசினார்.. திரேந்திர சாஸ்திரி இந்துக்களை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் “ தான் ஒரு அதிசயம் செய்ததாக அவர் ஒருபோதும் கூறவில்லை, அவர் ஹனுமானின் சக்தியால் தான் நடந்தது என்று கூறுகிறார்,” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

இனி அரசியலில் ஓபிஎஸ்-ஸின் எதிர்காலம் ஜீரோ தான்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்...

Thu Feb 23 , 2023
அரசியலில் இனி ஓபிஎஸ்-ன் எதிர்காலம் ஜீரோவாக தான் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.. அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.. மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. இதன் மூலம் அதிமுக மற்றும் இரட்டை இலை […]
’தினகரனோடு சேர்ந்து பாழாய்போன ஓபிஎஸ்’..! பாட்டு பாடி கலாய்த்த ஜெயக்குமார்..!

You May Like