முன்னாள் காதலன் வீட்டிற்கு புதிய காதலனுடன் சென்ற இளம்பெண்..!! கடைசியில் நடந்த சம்பவம்..!!

மும்பை அருகிலுள்ள கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் லலித் உஜ்ஜைன்கர். இவர் திவாவைச் சேர்ந்த கிரண் சோனாவானே என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்திருந்தனர். இதனால் கிரண், ஆதித்யா என்பவருடன் பழகி வந்துள்ளார். அதோடு இவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் லலித், அந்தப் பெண்ணிடம், ஆதித்யாவுடன் பழகுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் மறுத்துவிட்டார். அதோடு இருவரும் காதலித்தபோது கிரண், லலித்திடம் ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்திருந்தார். அது தனக்கு திரும்ப வேண்டும் என்று கிரண் கேட்டுள்ளார். அதோடு அதை வாங்க வீட்டுக்கு வருவதாக லலித்திடம் தெரிவித்திருந்தார்.

முன்னாள் காதலன் வீட்டிற்கு புதிய காதலனுடன் சென்ற இளம்பெண்..!! கடைசியில் நடந்த சம்பவம்..!!

இதனால், லலித் தன்னுடைய நண்பர்கள் 3 பேரை வீட்டுக்கு வரவழைத்திருந்தார். கிரண் தன் புதிய காதலன் ஆதித்யாவுடன் லலித் வீட்டுக்கு வந்துள்ளார். லலித் வீட்டில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. புதிய காதலனைக் கைவிடச்சொல்லி லலித் தகராறு செய்தார். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. லலித்தும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து ஆதித்யாவை அடித்து உதைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ஆதித்யாவை குத்திக் கொலை செய்துவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கிரண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் ஒரு குற்றவாளி மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் குற்றவாளி லலித் மத்தியப் பிரதேசத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவனைக் கைது செய்ய இரண்டு தனிப்படை போலீசார் மத்தியப்பிரதேசம் விரைந்திருக்கின்றனர்.

CHELLA

Next Post

நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளருமா..? யூடியூப்பில் திடீரென ட்ரெண்ட் ஆன சித்தா மருத்துவர் ஷர்மிகாவுக்கு செக்..!!

Mon Jan 9 , 2023
மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, நல்லவர்களுக்கு தான் குழுந்தை பிறக்கும் என சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில், தவறான தகவலை கூறுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதை அடுத்து இந்திய மருத்துவ இயக்குனரகம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நல்ல மனது உள்ளவர்களுக்கு தான் குழந்தை பிறக்கும், நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புறப்படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், ஒரு […]
நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளருமா..? யூடியூப்பில் திடீரென ட்ரெண்ட் ஆன சித்தா மருத்துவர் ஷர்மிளாவுக்கு செக்..!!

You May Like