பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பி காரில் சென்ற இளம்பெண்.. கதற கதற கூட்டு பலாத்காரம்..!! ஷாக் சம்பவம்..

rape 1

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோமதி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று மாலை தனது பக்கத்து வீட்டுக்காரர்களான மிதுன் மற்றும் போவர் என்ற இரு இளைஞர்களுடன் அருகிலுள்ள கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறி பெண்ணை மீண்டும் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.


ஆனால், வீடு திரும்புவதற்குப் பதிலாக, உதய்பூர் ரயில் நிலையம் நோக்கி கார் சென்றது. இது வீட்டிற்கு செல்லும் வழி இல்லையே என அந்த பெண் கேட்க.. வாயை மூடி பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து காரிலே அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆள் நடமாட்டம் குறைவான பகுதி என்பதால் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உதவ யாரும் இல்லை..

இதே நேரத்தில், இரவு சுமார் 10 மணியளவில் அவர்கள் சென்ற கார் போலீசாரால் சோதனைச் சாவடியில் வழக்கமான சோதனைக்காக நிறுத்தப்பட்டது. இளைஞர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்த இளம்பெண் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து போலீசாரிடம் தெரிவித்தார்.

போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காரில் இருந்த மிதுன் மற்றும் போவர் ஆகிய இரு இளைஞர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், இருவருக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: 5 ஆண்டுகளில் ரூ. 7 லட்சம் வருமானம் கிடைக்கும்..! தபால் அலுவலகத்தின் சிறந்த திட்டம் இதுதான்!

English Summary

A young woman who trusted her neighbors and went in a car.. was gang-raped while screaming..!!

Next Post

1960-ல் சினிமாவில் அறிமுகம்; 200+ படங்கள், 70 வயதில் பிளாக்பஸ்டர் ஹிட்! 2 முறை திருமணம் செய்தும் சிங்கிள்.. பான் இந்தியா ஐகானாக வலம் வரும் தமிழ் நடிகர் யார்?

Sat Aug 23 , 2025
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய திரையுலகிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.. தனது நடிப்பின் மூலம் ஆகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட வெகு சில நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.. 1960-ல் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கியது முதல் 70 வயதில் அகில இந்திய அளவில் ஒரு சூப்பர் ஸ்டாராக மாறியது வரை, […]
AA1B0qja 1

You May Like