“ச்ச்சீ.. குழம்பா இது”? கடுப்பான கணவன்! மனைவி எடுத்த சோகமான முடிவு !

தென்காசி அருகே குழம்பு ருசியாக இல்லாததால் தகராறு செய்த கணவனின் செயலால் மனம் உடைந்த மனைவி எடுத்த முடிவு அப்போது உள்ளவர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் செங்கனூர் பகுதியைச் சார்ந்த தொழிலாளி விஜய பாண்டியன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது மனைவியின் பெயர் மகேஸ்வரி வயது 29 . சம்பவம் நடந்த தினத்தன்று பணியிலிருந்து வீட்டிற்கு வந்த விஜய பாண்டியன். மனைவியிடம் சாப்பாடு போட சொல்லி இருக்கிறார் . அப்போது அவரது மனைவி மகேஸ்வரி உணவை பரிமாறி இருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே விஜயபாண்டியன் குழம்பு ருசியாக இல்லை எனக் கூறி மகேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின்பும் அவரது சமையலை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த நிலையிலேயே காணப்பட்டிருக்கிறார் மகேஸ்வரி.


இந்நிலையில் விஜய பாண்டியன் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவெடுத்து இருக்கிறார் மகேஸ்வரி. இதனைத் தொடர்ந்து பேன் தொல்லைக்காக பயன்படுத்தும் மருந்தை எடுத்து அவர் குடித்துள்ளார். இதன் காரணமாக மயக்கம் அடைந்து கிடந்த அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் மகேஸ்வரி . இது தொடர்பாக ஜங்கா நூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

1newsnationuser5

Next Post

"தன் கண்ணிலேயே மிளகாய் பொடி...."!விழுப்புரம் அருகே நூதன முறையில் சிக்கிய திருடன் !

Wed Feb 22 , 2023
விழுப்புரம் அருகே வீட்டில் திருட வந்த இடத்தில் தான் வைத்திருந்த மிளகாய் பொடியால் திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் சுவாரசியமான சம்பவம் நடந்தேறி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் அரக்கண்டநல்லூரை அடுத்த சத்திய கண்டனூர் அரவிந்த் நகரைச் சார்ந்தவர் 45 வயதான சக்திவேல். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று வந்திருக்கிறார். இரவு சுமார் 10.30 மணி அளவில் வீட்டிற்கு வந்த இவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. பூட்டியிருந்த வீட்டின் கதவுகள் […]
IMG 20230222 WA0122

You May Like