பணம் செலுத்த ஆதார் அட்டையைப் பயன்படுத்துகிறீர்களா..? ஆம் எனில், டிசம்பர் 1, 2022 முதல் இந்தச் சேவையைப் பெறுவதற்குக் கட்டணமாக நீங்கள் அதிகப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை அல்லது AePS அமைப்பு, உங்கள் ஆதார் எண் மூலம் முழு வங்கிச் சேவையையும் மேற்கொள்ளலாம். ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து மட்டுமே இந்தச் சேவையைப் பெற முடியும். ஒரு நபர் தனது வைப்பு தொகை, கடன் மற்றும் நிதி பரிமாற்றம் குறித்து விசாரிக்கலாம்.
சமீபத்திய அறிவிப்பின்படி, ஒரு பண பரிவர்த்தனைக்கு ரூ.20 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இலவச வரம்பை முடித்த பிறகு இது எடுக்கப்படும். ஒரு மினி ஸ்டேட்மெண்ட்க்கு ரூ.5 ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்திய அஞ்சல் பேமெண்ட் வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு பரிவர்த்தனை செய்யலாம். பரிவர்த்தனையை முடிக்க வாடிக்கையாளர் தனது பெயர், ஆதார் எண் மற்றும் கைரேகைகளைப் பயன்படுத்தலாம்.