கடந்த 2017 ஆம் வருடம் ஆதார் தொடர்பான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.ஆனால் அதற்கு முன்பு ஆதார் அட்டையை அனைத்து அரசு திட்டங்களுக்கும் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அதற்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டனர்.
அத்துடன் தற்போது தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய திமுக இந்த ஆதார் மசோதாவிற்கு மிக கடுமையான எதிர்ப்பை அப்போது பதிவு செய்தது.இந்த நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆதார் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து அரசு சார்ந்த திட்டங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று சொல்லப்பட்டது.
அந்த வகையில், தமிழக மின் ஆளுமை முகமைக்கு துணை அங்கீகார முகமாக கருவூலங்கள் மற்றும் கணக்கு துறை நியமனம் செய்யப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அரசிதழில் கருவூலங்கள் மற்றும் கணக்கு துறையானது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், அரசின் பலன்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்றும், ஆதார் ஒதுக்கப்படும் வரையில் ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் எனவும் கருவூலங்கள் மற்றும் கணக்கு துறையின் மூலமாக பயன்களை பெறுவோரின் ஆதார் தகவல்களை அந்த துறையே உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.