’இந்த மாதத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’..!! காலக்கெடு நிர்ணயித்தது மின்சார வாரியம்..!!

மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணை வரும் ஜனவரிக்குள் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் காலக்கெடு விதித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்காக https://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

’இந்த மாதத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’..!! காலக்கெடு நிர்ணயித்தது மின்சார வாரியம்..!!

முன்னதாக, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால், மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், தற்போது மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணை வரும் ஜனவரிக்குள் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் காலக்கெடு விதித்துள்ளது.

CHELLA

Next Post

#காஞ்சிபுரம் : ஒரே தூக்கில் இறந்த நிலையில் காதலர்கள்.. காதலை ஏற்க மறுத்த பெற்றோர்கள்..!

Thu Nov 24 , 2022
காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் உள்ள உத்திரமேரூரில் ஜெயராமன் (29), எம்.காம் பட்டதாரி வசித்து வருகிறார். இவர் சில ஆண்டுகளாக பீர்க்கன்காரணை, அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அந்த இளைஞர் உத்திரமேரூரில் படிக்கும்போதே பி.டெக் பட்டதாரியான இளம்பெண் யுவராணி (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே சுமார் 6 ஆண்டுகள் காதல் தொடர்ந்துள்ளது. சில நாட்களில் யுவராணிக்கு […]
n4448551641669273998194a3be69fdbc04111670ee6f49108a5f554410c162a96a9015a9eed86f26377e20

You May Like