இருசக்கர வாகனங்களின் விலை ரூ.10,000 உயரப்போகுது…! அரசின் புதிய விதியால் ஏற்படப்போகும் மாற்றம்…

bike showroom

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) பிரேக்கிங் முறை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது.


ஏபிஎஸ் என்பது, வாகன ஓட்டுநர் அவசர நிலையில் திடீரென பிரேக் அடிக்கும்போது, சக்கரங்கள் லாக் ஆகாமல் தடுக்கக்கூடிய ஒரு தொழில்நுட்ப பாதுகாப்பு முறை. இது வாகனம் ஸ்கிட் ஆகாமல், கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கிறது. இதனால், வாகன விபத்துகளைக் குறைக்கும் முக்கிய சாதனமாக இது கருதப்படுகிறது. இதுவரை ஏபிஎஸ் முறையை 125 சிசி மேற்பட்ட சில வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

ஆனால் புதிய நடைமுறையின்படி, எல்லா வகை இருசக்கர வாகனங்களிலும் இந்த முறையை பயன்படுத்த வேண்டும் என்பது அரசு நோக்கம். இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படுவதால், வாகன உற்பத்தியாளர்களுக்கு உற்பத்திச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூடுதல் செலவுகள் நேரடியாக வாகன விலையை உயர்த்தும் என்பதே வல்லுநர்களின் கணிப்பு.

அதன்படி, ஏபிஎஸ் பொருத்தப்பட்டு வரும் இருசக்கர வாகனங்களின் விலை குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற விலையுயர்வு, நுகர்வோருக்கு ஒரு சுமையாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் 44% இரு சக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன. எனவே அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவது மிக முக்கியம். அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் அறிமுகம் செய்வது மிகவும் அவசியமானது. ஏபிஎஸ் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் கூடுதல் செலவாகும் என்பத உண்மைதான். ஆனால் பாதுகாப்பே மிக முக்கியம்.

Read more: 43 வயதேயான தென்கொரிய நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

Next Post

அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டின் முன்பு போலீசார் குவிப்பு.. மக்கள் நல பணியாளர்கள் போராட்டம் எதிரொலி..

Wed Jul 2 , 2025
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அரசு திட்டங்களை கொண்டு செல்லும் பணியில் மக்கள் நல பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணி நிரந்தரம், சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.. ஊரக வளர்ச்சி துறையிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த […]
FotoJet 10 1

You May Like