#வேலூர்: தாய் மனப்பான்மை கொண்ட குரங்கின் செயல்.. நாய்க்குட்டிக்கு பாலூட்டி வளர்க்கும் நெகிழ்ச்சி தருணம்..!

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள பொன்னை பேருந்து நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக ஐந்து குட்டிகளை நாய் ஒன்று ஈன்று உள்ளது. பிறந்த ஐந்து கட்டிகளில் நான்கு குட்டிகளை எடுத்துக்கொண்டு வேறு பகுதிக்கு தாய் நாய் சென்று விட்டது. 


இந்த நிலையில் ஒரு நாய்க்குட்டி மட்டும் தனியாக தவித்து கொண்டிருந்த நிலையில், அங்கே இருக்கும் மருந்து கடை ஒன்றிற்கு வழக்கமாக வந்து சென்றுக் கொண்டிருந்தது.

அந்த பகுதிக்கு வந்த நாய்க்குட்டியை அங்கிருந்த குரங்கு ஒன்று பார்த்துள்ளது. அதனை தன்னுடைய குழந்தையாக பாவித்து தன்னுடன் அணைத்துக்கொண்டு, பால் கொடுத்து வளர்த்து வருகிறது.

மனிதர்களிடையே இப்படி மனித நேயமிக்க செயல்களை பார்ப்பது அரிதாக இருக்கின்ற நிலையில், பிறந்து சில நாட்களே ஆன நாய்க்குட்டியை தன்னுடைய குட்டியாக நினைத்து வளர்க்கும் குரங்கின் செயலானது அங்குள்ளோரின் மனதில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்பட செய்துள்ளது.

1newsnationuser5

Next Post

இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!! இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா..?

Tue Nov 29 , 2022
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தேனி […]
Rain 3

You May Like