வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள பொன்னை பேருந்து நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக ஐந்து குட்டிகளை நாய் ஒன்று ஈன்று உள்ளது. பிறந்த ஐந்து கட்டிகளில் நான்கு குட்டிகளை எடுத்துக்கொண்டு வேறு பகுதிக்கு தாய் நாய் சென்று விட்டது.
இந்த நிலையில் ஒரு நாய்க்குட்டி மட்டும் தனியாக தவித்து கொண்டிருந்த நிலையில், அங்கே இருக்கும் மருந்து கடை ஒன்றிற்கு வழக்கமாக வந்து சென்றுக் கொண்டிருந்தது.
அந்த பகுதிக்கு வந்த நாய்க்குட்டியை அங்கிருந்த குரங்கு ஒன்று பார்த்துள்ளது. அதனை தன்னுடைய குழந்தையாக பாவித்து தன்னுடன் அணைத்துக்கொண்டு, பால் கொடுத்து வளர்த்து வருகிறது.
மனிதர்களிடையே இப்படி மனித நேயமிக்க செயல்களை பார்ப்பது அரிதாக இருக்கின்ற நிலையில், பிறந்து சில நாட்களே ஆன நாய்க்குட்டியை தன்னுடைய குட்டியாக நினைத்து வளர்க்கும் குரங்கின் செயலானது அங்குள்ளோரின் மனதில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்பட செய்துள்ளது.