“12 வருடங்களுக்கு முன் நான் OK சொன்ன படம் இது இல்ல..” கடும் கோபத்தில் தனுஷ் வெளியிட்ட அறிக்கை..!! என்ன ஆச்சு..?

dhanush upset

ராஞ்சனா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி AI மூலம் மாற்றியமைக்கப்பட்டதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் , சோனம் கபூர் நடித்து இந்தியில் வெளியான படம் ராஞ்சனா. தமிழில் இப்படம் அம்பிகாபதி என டப் செய்யப்பட்டு வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அண்மையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர். அதில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மாற்றப்பட்டதை தொடர்ந்து தன் அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ராஞ்சனா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஏ.ஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்திருக்கின்றனர். இது என்னை பாதித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். கிளைமாக்ஸ் காட்சியை ஏ.ஐ மூலம் மாற்றியது அப்படத்தின் தன்மையையே மாற்றிவிட்டதாக தெரிகின்றது.

இதுகுறித்து என்னுடைய விருப்பத்தை நான் சம்மந்தப்பட்டவர்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஏ.ஐ மூலம் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றுவதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை என நான் சம்மந்தப்பட்டவர்களிடம் சொல்லிவிட்டேன். இருந்தாலும் அவர்கள் கேட்டதாக தெரியவில்லை. இது நான் கமிட்டான ராஞ்சனா படம் கிடையாது. கிளைமாக்ஸ் காட்சியை ஏ.ஐ மூலம் மாற்றி அப்படத்தின் உண்மையான ஆத்மாவையே எடுத்துவிட்டனர்.

இதுபோல ஏஐ மூலம் ஒரு படத்தை மாற்றி அமைப்பது கலைக்கும் கலைஞர்களுக்கும் ஆபத்தான விஷயமாகும். கதை சொல்லையும், சினிமாவையும் பாதிக்கும் விஷயமாகும். எனவே இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன் என்று தனுஷ் கோபமாக அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்.

Read more: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது..!! நடுக்கடலில் பரபரப்பு..

English Summary

Actor Dhanush has condemned the fact that the climax scene of the movie Raanjhanaa was modified using AI.

Next Post

சத்தமே இல்லாமல் கொல்லும் கெட்ட கொழுப்பு.. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்து.. நிபுணர்கள் எச்சரிக்கை..

Mon Aug 4 , 2025
கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வயதானவர்களுக்கு மட்டுமே என்ற தவறான கருத்து இருந்தது. இது வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்ற தவறான கருத்தும் இருந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 31 சதவீத மக்களுக்கு அதிக கொழுப்பு உள்ளது. எனவே, இது குறித்த விழிப்புணர்வை எல்லா இடங்களிலும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். அதிக கெட்ட கொழுப்பு இருப்பது, எந்த அறிகுறிகளையும் காட்டாது. ஆனால் அது ரத்த நாளங்களில் குவிந்து அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இது […]
112312958 1

You May Like