தனது உறவினாராலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என மலையாள சின்னத்திரை நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த், தனது உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விஷயத்தைக் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், “என் வாழ்வில் இருள் நிறைந்த பகுதி அது. என்னுடைய குழந்தைப் பருவத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். நான் 5ஆம் வகுப்பு படிக்கும்போது இது நடந்தது. சம்பந்தப்பட்ட நபர் என் உறவினர் என்பதால் என் வீட்டில் கூட நான் இது குறித்து சொல்லவில்லை.
குழந்தைகள் இதுபோன்ற விஷயங்களை சந்திக்கும்போது பயப்படாமல் எதிர்வினையாற்ற வேண்டும். எந்த வயதிலும் பெண்கள் தைரியமாக இதனை எதிர்கொள்ள வேண்டும். என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அந்த உறவினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த பின்பு, என்னிடம் மன்னிப்பு கேட்டு அவன் மெசேஜ் செய்தான். நான் அவனை வாழ்த்தினேன். நான் நினைத்தால் இப்போதும் அவனை என் சொந்தங்கள் முன்னால் வெளிப்படுத்த முடியும்.
அந்த பயம் அவனுக்கு உண்டு. இப்போது அவனுக்கு மகள் பிறந்திருப்பதால் இந்த குற்றவுணர்ச்சி இன்னும் அதிகமாகி இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்நாள் முழுக்க இது அவனுக்குத் தொடரும் என்பதுதான் அவனுக்கான தண்டனை” என்றார்.
Read More : Lok Sabha | ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு..!! தமிழகத்தில் பொது விடுமுறை..!!