தலைக்கேறிய போதை!… இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்!… ஸ்வீடன் நாட்டை சேர்ந்த முதியவர் கைது!

பாங்காக்கில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் குடிபோதையில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததற்காக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 63 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 6E-1052 என்ற இண்டிகோ விமானம் மும்பை சென்றுக்கொண்டிருந்தது. பயணிகளுடன் வந்த இந்த விமானத்தில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 63 வயது முதியவர் ஹரால்ட் ஜோனஸ் என்ற பயணியும் வந்துள்ளது. அப்போது, விமானம் நடுவானில் சென்றுக்கொண்டிருந்தபோது, உணவு பரிமாறும் போது முதியவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதாவது அசைவ உணவு கேட்ட ஜோனஸுக்கு அசைவ உணவு வழங்கிய பணிப்பெண் கட்டணம் செலுத்துவதற்காக ஏடிஎம் கார்டை கேட்டுள்ளார். அப்போது பணிப்பெண்ணின் கையை பிடித்து இழுத்ததுடன் அவரிடம் சில்மிஷத்திலும் முதியவர் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து விமானம் மும்பை விமான நிலையம் வந்தவுடன், பணிப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதியவருக்கு அந்தேரி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

1newsnationuser3

Next Post

PPF, SSY உள்ளிட்ட பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு ஆதார், பான் கட்டாயம்!...

Sun Apr 2 , 2023
அரசு ஆதரவு பெறும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் முதலீட்டில் பான் கார்டை வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), தபால் அலுவலக சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு […]
1023425 panaadhaarlinking

You May Like