’என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு’..? வாடகை வீட்டில் வசிப்பவர்களே உஷார்..!!

வாடகை வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு வீட்டில் ஆணி அடிக்கக்கூடாது, முறை வாசல் செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகளை வீட்டின் உரிமையாளர்கள் விதிக்கப்படுவது உண்டு. இன்னும் சொல்லப்போனால் இரண்டு நாட்கள் உறவினர்கள் வந்து தங்கினாலே, அதற்கும் ஒரு சார்ஜ் போட்டு கட்டணம் வசூலிப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போது ஒருபடி மேலே போய், வாடகை வீட்டில் மீன் வளர்க்க 12,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்த சம்பவம், மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த நிக் என்ற பெண், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தங்க மீனை (கோல்டன் ஃபிஷ்) வீட்டில் வளர்ப்பதற்கு ஒரு முறை கட்டணமாக, 200 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் 12,000 ரூபாய்) மற்றும் மாத கட்டணமாக 15 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் 1,240 ரூபாய்) கேட்டதாக, கட்டண ரசீதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, `என்னதான் இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா’ என்பது போல நெட்டிசன்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் வாடகை வீட்டில் தேவையே இல்லாமல் வசூலித்த கட்டணங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Chella

Next Post

அடேங்கப்பா என்னா ’உருட்டு’..!! பரோட்டாவை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர்..!! வைரல் வீடியோ..!!

Wed Feb 8 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா […]
அடேங்கப்பா என்னா ’உருட்டு’..!! பரோட்டாவை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர்..!! வைரல் வீடியோ..!!

You May Like