’என் அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட்’..!! கதறிய ஜீ தமிழ் சீரியல் நடிகை..!! யாருன்னு தெரியுதா..?

சமீப காலமாகவே, வெள்ளித்திரை நடிகைகளை தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும், பட வாய்ப்பு தேடி சென்றபோது தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகை லாவண்யா மற்றும் ஆனந்த ராகம் சீரியல் நடிகை ரிஹானா ஆகியோர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியிருந்தனர். அவர்களை தொடர்ந்து மற்றொரு சீரியல் நடிகையும் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியிருக்கிறார்.


அந்தவகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்வாதி ஷர்மா. இவர் கல்லூரி காலங்களிலேயே மாடலிங் செய்ய துவங்கி, பின்னர் பல படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியும், கிடைக்காமல் போகவே, சீரியல் நடிகையாக மாறினார். ஸ்வாதி ஷர்மா திரைப்பட வாய்ப்பு தேடிய காலங்களில் தன்னுடைய அம்மாவுடன் தான், வாய்ப்பு கொடுப்பதாக அழைக்கும் சினிமா கம்பெனிகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி அவர் சென்ற ஒரு இடத்தில், ஸ்வாதியிடம் அவர் அம்மாவின் முன்பே ஒருவர் மிகவும் அசிங்கமாக அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஸ்வாதியின் அம்மா, அந்த நபரையும், ஸ்வாதியையும் திட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த நடிப்பே உனக்கு வேண்டாம் என அவர் அம்மா கூறிவிட, அவரை சமாதானம் செய்து பின்னர் கன்னட சீரியல்களில் நடிக்க துவங்கினார். இதை தொடர்ந்து தமிழில், ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னைக்கு நடிக்க வரும் போது கூட பயந்து தான் வந்ததாகவும் பின்னரே அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பியதாக கூறியுள்ளார். அட்ஜஸ்ட்மென்ட் குறித்து, ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் நடிகையான சுவாதி ஷர்மா கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

30000 பேருக்கு வேலை ரெடி..! தமிழ்நாடு அரசு

Thu Jun 29 , 2023
தமிழ்நாடு அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்கை கொடுக்க இருக்கும் வேளையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சர்வதேச MSME நாள் விழாவில் சுமார் 1723.05 கோடி ரூபாய் அளவிலான முதலீடு உறுதி செய்யப்பட்டது. இந்த விழாவில் SC/ST பிரிவில் தொழில்முனைவோர்-ஐ உருவாக்கும் சிறப்பு அரசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு, 1723.05 கோடி ரூபாய் முதலீட்டு ஈர்க்கும் […]
போதை பொருள் குற்றங்கள் அதிகரிப்பு..! பிள்ளைகளிடம் பெற்றோர்கள் அன்போடு பேசுங்கள்..! - முதல்வர் முக.ஸ்டாலின்

You May Like