’அட்ஜெஸ்மெண்ட் செஞ்சா தான் வாய்ப்பு கிடைக்கும்’..!! நடிகை தேவிப்ரியா ஓபன் டாக்..!!

பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான தேவிப்ரியா திரைத்துறையில் அட்ஜெஸ்மெண்ட் செய்யாததால் தான் பல வாய்ப்புகளை இழந்ததாக அதிர்ச்சி காரணத்தை கூறியுள்ளார்.


சினிமாவை பொறுத்தவரை நடிகர் அஜித்தின் வாலி படத்தின் ஒரு சிறிய காட்சியில் மட்டுமே நடித்து பாராட்டுகளை பெற்றிருப்பார் தேவிப்ரியா. ஆனால், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை. சின்னத்திரையில் வில்லி நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக புகழுடன் வலம் வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், ‘நியாயமா சொல்லணும்னா சினிமாவுல நடிக்கணும்னா படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு. அது இல்லைன்னு நான் சொல்லமாட்டேன்.

சினிமாவுல சின்ன கேரக்டர்ல நடிக்கணும்னா கூட பல பேர் கூட அட்ஜெஸ்மெண்ட் பண்ண வேண்டியிருக்கு. இது நடிகைகளுக்கு பரவலா நடக்குது. இதை பொறுத்துக்க முடியாம தான் பல நடிகைகள் கல்யாணம் செஞ்சிகிட்டு செட்டில் ஆகிட்றாங்க. நான் அந்த மாதிரியான வாய்ப்புகள விரும்புறதே கிடையாது. அந்த நோக்கத்தோடு யாராவது என்கிட்ட வந்தா உதறி தள்ளிடுவேன். இதனாலதான், எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமலேயே போய்டுச்சு’ என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

CHELLA

Next Post

”எங்களால் வாழ முடியவில்லை”..!! மனைவியை சுட்டுக்கொன்று தொழிலதிபரும் தற்கொலை..!! சிக்கியது கடிதம்..!!

Sun Jan 29 , 2023
தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் கிஷோர் கஞ்ச் பகுதியில் ஜவுளி தொழிலதிபரான சஞ்சய் சேத் என்பவர் தனது மனைவி மீனுவுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சஞ்சய் சேத் மற்றும் மீனு ஆகிய இருவரும் வீட்டின் 2-வது மாடியில் உள்ள அறையில் இருந்தனர். அப்போது திடீரென்று அவர்களது வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிச்சென்று […]
death

You May Like