கந்து வட்டித் தொல்லை.. அதிமுக பிரமுகர் கைது.! கரூரில் பரபரப்பு.!

கரூர் மாவட்ட பகுதியில் குளித்தலைக்கு அருகே பாலசமுத்திரப்பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலராக இருப்பவர் வசந்தா. இவரது கணவர் பழனிச்சாமி. கணவர் தோகைமலை கிழக்கு ஒன்றிய அதிமுக ஜெ.பேரவையில் செயலாளராக இருந்து வருகிறார்.

மருதைவீரன் என்பவர் குளித்தலையில் இருக்கும் டிஎஸ்பியிடம் பழனிச்சாமியின் பேரில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், பழனிச்சாமியிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்று வந்த நிலையில் சில நாட்களாக கந்துவட்டியை கேட்டு மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி மற்றும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.” என புகார் அளித்துள்ளார். இந்தபுகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்றைய தினத்தில் கைது செய்துள்ளனர். மேலும் குளித்தலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Baskar

Next Post

சூடு வைத்ததால் சிறுமி உயிரிழப்பு.. பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.!

Sun Nov 6 , 2022
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் செங்குளத்துப்பட்டியில் 4 வயது சிறுமி சூடு வைத்து துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பெயரில் புகார் மேற்கொள்ளபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிறுமியை வளர்த்த ராஜேஷ் குமார் மற்றும் கீர்த்திகா என்ற தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது . […]
edding Love Happy Couples Husband Wife Romance

You May Like