கரூர் மாவட்ட பகுதியில் குளித்தலைக்கு அருகே பாலசமுத்திரப்பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலராக இருப்பவர் வசந்தா. இவரது கணவர் பழனிச்சாமி. கணவர் தோகைமலை கிழக்கு ஒன்றிய அதிமுக ஜெ.பேரவையில் செயலாளராக இருந்து வருகிறார்.
மருதைவீரன் என்பவர் குளித்தலையில் இருக்கும் டிஎஸ்பியிடம் பழனிச்சாமியின் பேரில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், பழனிச்சாமியிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்று வந்த நிலையில் சில நாட்களாக கந்துவட்டியை கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி மற்றும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.” என புகார் அளித்துள்ளார். இந்தபுகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்றைய தினத்தில் கைது செய்துள்ளனர். மேலும் குளித்தலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.