ADMK | ’நேரம், நாள், இடம் குறியுங்கள்’..!! ’எத்தனை பேரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்’..!! அண்ணாமலைக்கு கோவை அதிமுக வேட்பாளர் சவால்..!!

“கோயம்புத்தூர் வளர்ச்சிக்காக பேச நான் தயார். அண்ணாமலை தயாரா…? தயார் என்றால் நேரம், நாள், இடம் குறியுங்கள். வருகிறேன்” என்று கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார்.

கோவையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில் பேசிய கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சக வேட்பாளரான பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு சவால் விடுத்தார்.

அவர் பேசுகையில், ”அண்ணாமலைக்கு ஒரு சவால். கோவையில் இல்லை எங்கு வேண்டுமானாலும் மேடை போடுங்கள். என்ன மொழியில் வேண்டுமானாலும் பேசலாம். எத்தனை பேரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். கோயம்புத்தூர் வளர்ச்சிக்காக பேச நான் தயார். அண்ணாமலை தயாரா..? தயார் என்றால் நேரம், நாள், இடம் குறியுங்கள். வருகிறேன்.

அண்ணாமலை கடந்த ஒரு வருடமாக ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். அதிமுக தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்திவிட்டு அதிமுகவின் கோட்டையிலே வந்து நின்றால் வெற்றி பெற விட்டுவிடுவமோ? அண்ணாமலை, ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ” என்று சவால் விடுத்து பேசினார்.

Read More : தமிழகமே அதிர்ச்சி..!! பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..!! 100 பேரின் கதி..? நெருங்க முடியாமல் தவிக்கும் தீயணைப்புத்துறை..!!

Chella

Next Post

ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் கரூர் டாக்டர்

Sat Mar 23 , 2024
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை வீட்டின் வெளியே வைத்து ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் பிரபல கரூர் மருத்துவர். கரூர் பண்டரிநாதன் தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்திவரும் பிரபல மருத்துவர் மோகன் என்பவர், தனது மருத்துவமனையுடன் அமைந்துள்ள வீட்டு கேட்டில் ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை தொங்கவிட்டுள்ளார். அந்தப் பலகையில் மாண்புமிகு […]

You May Like