ADMK | இரட்டை இலைக்கு சிக்கல்..!! வேறு சின்னத்தில் போட்டியிடும் அதிமுக..? அதிர்ச்சியில் எடப்பாடி..!!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி  திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன். 

உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தான் தொடர்ந்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால், தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

அதில் மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் தான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 25ஆம் தேதி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விளக்கம் கேட்டு எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Read More : Ration | ரேசனில் பொருட்கள் கிடைக்காது..!! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

Chella

Next Post

ADMK | ’இப்பவே மெகா கூட்டணி உருவாகியிருச்சே’..!! இரவோடு இரவாக ஆதரவு..!! துள்ளிக் குதிக்கும் எடப்பாடி..!!

Tue Mar 12 , 2024
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் தங்களின் நிலைப்பாடுகள் குறித்து அறிவித்து வருகின்றன. பெரிய கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்யும் முனைப்பில் இருந்து வரும் நிலையில், சிறு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள 3 அணிகளில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிவித்து வருகின்றன. அப்படி சிறு கட்சிகள் பலவும் அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றன. புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், […]

You May Like