ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு..!! காரைக்காலில் கொரோனாவுக்கு பெண் பலி..!! பீதியில் பொதுமக்கள்..!!

காரைக்காலில் ஒன்றரை ஆண்டுக்குப்பின் கொரோனா தொற்று பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 20-க்கும் மேற்பட்டவருக்கு கொரோனா பதிவாகியுள்ள நிலையில், தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா மரணத்தால் அப்பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

CHELLA

Next Post

இன்ஸ்டாகிராமில் முதலீடு விளம்பரம்! நம்பி ஏமாந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!

Mon Apr 3 , 2023
ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்காலங்களில் ஆன்லைன் வியாபாரம் மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பிட்காயின், டிரேடிங், பங்குச்சந்தை என எண்ணற்ற வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்வதற்கு கும்பல் தயாராகவே இருக்கிறது. இதே போன்ற ஒரு கும்பலிடம் தான் தனது முதலீட்டை இழந்திருக்கிறார். சென்னையிலிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் […]
IMG 20230403 WA0116

You May Like