“காதலித்து திருமணம் செய்தும் பிரித்துவிட்டனர்” இளைஞரின் உருக்கமான கடிதம்..,

தருமபுரி அருகே உள்ள பழைய தருமபுரி சின்னத்தோப்பு பகுதியை சேர்ந்த வேலு மகன் சத்ரியன்(25) என்பவர் சம்பா கடையில் வேலை செய்து வந்தார். 17 வயதுடைய பெண்ணை காதலித்து வந்த சத்ரியன் கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து பெண்ணின் தாயார்,தனது மகளை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர், சத்ரியனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளிவந்த சத்ரியன் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்ததால், கல்லூரிக்கு செல்ல தருமபுரி பேருந்து நிலையத்தில் காத்திருந்த அந்த பெண்ணை சேர்ந்து வாழ் வருமாறு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தாயார் சத்ரியனை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இரண்டு நாட்களாக காணமல் போன இளைஞர், இன்று காலை தருமபுரி அடுத்த ஆலங்கரை செல்லும் வழியில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகில் மரத்தில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட சத்ரியன் 4 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தில், தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை பிரித்துவிட்டனர். தன் காதல் மனைவியை நினைத்து, தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு மூவர் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சத்ரியனின் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாகவும், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி, உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராஜராஜன், தருமபுரி நகர காவல் துறையினர் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக கைது செய்தால் மட்டுமே, சாலை மறியலை கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலம் பிரதான சாலையில் போக்குவரத்தை ஒரு வழிப்பாதையாக மாற்றி விட்டனர். தொடர்ந்து கடிதத்தை வைத்து, விசாரணை நடத்தி வருவதாகவும், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் உடலை வாங்கி சென்றனர். இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kathir

Next Post

"எடுக்க எடுக்க வரும் தங்கம்" ரயில் நிலையத்தில் சிக்கிய 345 சவரன்.., இரயில்வே பாதுகாப்பு படை அதிரடி..!

Sun Dec 25 , 2022
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்திருந்தனர். அப்போது அங்கு இருந்த இரண்டு பேர் மீது சந்தேக ஏற்பட்டதை அடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்த போது அதில் ஏராளமான நகைகள் இருப்பதை கண்டு அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார். இருவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட இவர்கள் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சந்த் […]

You May Like