டெல்லி அருகே உள்ள ஆக்ரா மாவட்டத்தில் திடீரென்று காணாமல் போன 9 வயது சிறுமி அவருடைய வீட்டில் இருக்கும் ஸ்டோர் ரூமில் உள்ள அலமாரியில் சடலமாக மீட்க பட்டு இருக்கிறார். 19 வயது இளைஞரிடம் இது குறித்து நடத்திய விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை டி.சி.பி விகாஸ் குமார் தெரிவித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் அந்த சிறுமியின் வீட்டில் பணத்தை திருடி உள்ளார். அதனை பார்த்து விட்டதால் அந்த சிறுமி அந்த நபரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கைது செய்யப்பட்டதும் அந்த இளைஞர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் சன்னி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருடன் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை காணவில்லை என்று தேடும் போது அந்த இளைஞரும் உதவிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த சிறுமியின் தந்தை வழங்கிய புகாரின் அடிப்படையில், இளைஞர் சன்னியின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் சிறுமியின் வீட்டில் திருடிய 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் நீக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது சிறுமியின் பெற்றோர் வேலை காரணமாக, வெளியே சென்று இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின் தன்மை காரணமாக, அவர்கள் குழந்தைகளை தனியாக வைத்துவிட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்று க்கொள்ள வீட்டின் தனியாக இருக்கும் சிறுமியை கவனித்துக் கொள்ளுமாறு குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் சன்னியின் குடும்பத்தினரிடமும், மற்ற அண்டை வீட்டாரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.