அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் தர்வேஸ், விவசாய பிரிவு செயலாளர் சண்முக பாண்டியன் ஆகியோரை கட்சி பதவிகளில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார்.
கட்சி பணிகளை சரிவர செய்யாததால் வடசென்னை, கன்னியாகுமரி அதிமுக மாவட்ட செயலாளர்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் புரசை வி.எஸ்.பாபு (முன்னாள் எம்எல்ஏ) ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கட்சித் தலைமைக்கு கட்டுப்படாத அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் தர்வேஸ், விவசாய பிரிவு செயலாளர் சண்முக பாண்டியன் ஆகியோரை கட்சி பதவிகளில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். திருவாடனை ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) மதிவாணன், இளங்கோவன் (தெற்கு), பரமக்குடி நகர செயலாளர் ஜமால் ஆகியோரையும் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.
Read more: வரலாற்றில் இன்று!. உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!. பின்னணி என்ன?