கருப்பு மாஸ்க் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுகவின் உறுப்பினர்கள்…..! எதற்காக தெரியுமா…..?

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தேசிய அதிமுகவின் கொறடா எஸ்பி வேலுமணி முதலமைச்சர் பேசும் சமயத்தில் நேரலை ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மட்டும் நேரலை துண்டிக்கப்படுகிறது.


இதை யாரோ வேண்டுமென்றே செய்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். நேரலையில் ஒளிபரப்பாததை கண்டித்து நேற்று அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பேசுவதை நேரலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சபாநாயகர் நிகழ்ச்சி நிரலில் உள்ள எல்லாமே நேரடியாக ஒளிபரப்பப்படுவதாக தெரிவித்தார். அது ஒரு மற்றவை கடந்த காலங்களில் இருக்கின்ற நடைமுறைப்படி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். கவன ஈர்ப்பு தீர்மானமும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. எனவும் எதிர்வரும் தினங்களில் அனைத்தும் படிப்படியாக நேரலை செய்யப்படும் என்று கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலையாக ஒளிபரப்பாததை கண்டிக்கும் விதமாக அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் இன்று கருப்பு மாஸ் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வரும் ஜனநாயக விரோத போக்கை கண்டிக்கும் விதமாகவும் எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சனையை எழுப்பும்போது ஊடகங்களுக்கு பேரவையின் நேரடி ஒளிபரப்பை வழங்காமல் ஜனநாயக குரல் வலையை நெரிக்கும் போக்கை கண்டிக்கின்ற விதமாகவும், நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் அலட்சிய போக்கை கண்டிக்கும் விதமாகவும் கருப்பு மாஸ்க் அணிந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Post

18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து... தரமற்ற மருந்து தயாரித்தால் மத்திய அரசு அதிரடி..

Thu Apr 13 , 2023
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களில் 76 மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்தது.. கலப்பட மற்றும் தரமற்ற மருந்துகளின் உற்பத்தியை நிறுத்தவும், மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. போலி மருந்து நிறுவனங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 15 நாட்கள் மத்திய மற்றும் மாநில குழுக்கள் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. இந்த 76 மருந்து […]

You May Like