வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.
கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் நலக்குறைவு காரணமாக 2 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
2 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் 3.30 மணியளவில் உயிரிழந்தார். அவரின் உடல் தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று அதிமுக எடப்பாடி பழனிசாமி, கந்தசாமியை நலம் விசாரிக்க கோவை சென்றார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கந்தசாமியை சந்தித்து அவர் நலம் விசாரித்தார். அப்போத் அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
2021 தேர்தலில் அதிமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது வால்பாறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கிறார். அவரின் மறைவுக்கு அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. இறந்துவிட்டால், அந்த தொகுதி தேர்தல் ஆணையத்தால் காலியானதாக அறிவிக்கப்படும். 6 மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு இடை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் வால்பாறை எம்.எல்.ஏ உயிரிழந்ததால் அந்த தொகுதி இப்போது காலியாகி உள்ளது. எனவே விரைவில் வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம்..
Read More : சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு..