’தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடியிடம் இருக்காது’..!! ’தினகரனுக்கே சொந்தம்’..!! அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!!

“தேர்தலுக்கு பிறகு எடப்பாடி தலைமையிலான அதிமுக இருக்காது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஒப்பந்ததாரர்களுக்காக அதிமுக நடத்தப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இதை எல்லாம் ஆண்டவனோடு சேர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அதிமுகவை ஒப்பந்தரார்களுக்கு தாரை வார்த்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் நிறுத்தியிருக்கிற வேட்பாளர்களை பார்த்தாலே இது தெரியும்.

அதிமுக தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும். தினகரன் கையில் அதிமுக சென்றிருந்தால் ஸ்டாலின் முதலமைச்சராகியிருக்க மாட்டார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர்” என்றார்.

Read More : ’உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்’..? ’மகளிருக்கு வழங்கும் ரூ.1,000 இப்படித்தான் தர்றாங்க’..!! சீமான் புது விளக்கம்..!!

Chella

Next Post

தனது பாணியில் அண்ணாமலையை வறுத்தெடுத்த மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ..!! அவர் ஒரு சுஜுபி..!!

Sat Apr 13 , 2024
”அண்ணாமலை என்ன ஜோதிடரா?.. எங்க கட்சி அழிந்துபோய்டும்னு சொல்றதற்கு. அவர் இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கே உரிய பாணியில் விமர்சித்துள்ளார். தனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் காட்டமான விமர்சனங்களை […]

You May Like