கோடை விடுமுறையை முன்னிட்டு பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!! பயணிகள் கடும் அதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. மக்கள் தினம்தோறும் தங்கள் பயணத்தை பேருந்து, ரயில் மற்றும் விமானங்கள் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே பயணம் செய்து தங்களின் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 13 ஆயிரம் ரூபாயாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்களில் செல்வதை விட விமானத்தில் செல்வதால் குறைந்த நேரத்தில் சென்று விட முடியும் என்பதால் பெரும்பாலானோர் விமானத்தில் பயணிக்கின்றனர். ஆனால், தற்போது விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

உங்கள் உதடுகளை மென்மையாக மாற்ற சூப்பர் டிப்ஸ்..!! வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே செய்யலாம்..!!

Sun Apr 23 , 2023
உதடுகளில் கோடுகள் இருப்பது இயல்பான விஷயம் தான். ஆனால், சிலரின் உதடுகளில் அளவுக்கு அதிகமான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் இருக்கும். அவற்றை மறைக்க நாம் சில சமயங்களில் புது புது லிப்ஸ்டிக்-களை முயற்சிப்போம். ஆனால், இனி அவற்றை மறைக்க வேண்டாம். வீட்டில் இயல்பாக இருக்கும் சில பொருட்களை வைத்து, உதட்டில் உள்ள மென்கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கி மிருதுவான மற்றும் மென்மையான உதடுகள் பெற உதவும் சில எண்ணெய்கள் பற்றி […]
Lips

You May Like