தாய்லாந்தில் ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்தில் ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஃபுக்கெட் தீவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 156 பயணிகள் இருந்துள்ளனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரகாலத் திட்டங்களின்படி, ஏர் இந்தியா AI 379 விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட தேடுதலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்குள் எந்த வெடிகுண்டும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை 9:30 மணிக்கு ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு விமானம் புறப்பட்டது, ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வட்டமடித்து கொண்டிருந்த இந்த விமானம் தாய்லாந்து தீவில் மீண்டும் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பு நிறுவனமான Flightradar24 தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் நேற்று ஏர் இந்தியா விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில் 241 பேரும் உயிரிழந்துவிட்டனர். மேலும் இந்த விமானம் மருத்தவக்கல்லூரி விடுதி மீது மோதியதால், அங்கிருந்த மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 290ஆக உயர்ந்துள்ளது. இந்த சோகத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read More : ஏர் இந்தியா விபத்து : பலி எண்ணிக்கை 297 ஆக உயர்வு.. காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நேரில் ஆறுதல்..