MAYDAY அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்.. கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன..?

mayday

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மேடே அழைப்பு விடுத்துள்ளது. கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன.. மேடே அழைப்பு எப்தெல்லாம் பயன்படுத்தடும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 7878 (விமானம் AI171) புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு விமானத்தில் இருந்து மேடே அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் மேகனி நகர் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் விழுந்து, கரும்புகை மற்றும் தீயுடன் வெடித்தது.

மேடே அழைப்பு என்றால் என்ன? ‘மேடே’ என்ற வார்த்தை 1920களின் முற்பகுதியில் லண்டனில் உள்ள குராய்டன் விமான நிலையத்தின் வானொலி அதிகாரியான ஃபிரடெரிக் ஸ்டான்லி மோக்ஃபோர்டால் உருவாக்கப்பட்டது. இதற்கு அர்த்தம் எனக்கு உதவுங்கள் என்பதாகும். விமான மற்றும் கப்பல் போக்குவரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் உதவி கோருவதற்காக Mayday call சமிஞ்சை அனுப்பப்படும்.

இது 1923 ஆம் ஆண்டு வாக்கில் விமானிகள் மற்றும் கடற்படையினருக்கான சர்வதேச வானொலி தகவல்தொடர்புகளின் ஒரு பகுதியாக மாறியது, மேலும் 1927 ஆம் ஆண்டில் மோர்ஸ் “SOS” உடன் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு விமானி “மேடே” என்று சொல்லும்போது, ​​அவர்கள் உடனடி உதவி தேவைப்படும் உயிருக்கு ஆபத்தான அவசரநிலையை அறிவிக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான அவசரநிலை குறித்து, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் பிற விமானங்களுக்கும் இந்த ‘மேடே‘ அழைப்பு எச்சரிக்கிறது.  

எப்போதெல்லாம் ‘மேடே‘ அழைப்பு விடுக்கப்படும்:

விமானம் தீப்பிடிக்கும்போதோ, மூழ்கும்போதோ அல்லது பிற கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் சூழ்நிலைகள் ஏற்படும் போது, விமானிகள் ‘மேடே‘ என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். உதாரணமாக,

* விமானத்தின் எஞ்சின் பழுதாகும் போது மேடே அழைப்பு விடுக்கப்படும்.

* விமானம், விமானத்தின் கேபினில் தீ விபத்து ஏற்படும் போது..

* விமானத்தில் எரிபொருள் தீரும் போது..

* மருத்துவ அவசரநிலைகளின் போது..

* பறவை தாக்குதல் அல்லது விமானத்தில் கட்டமைப்பு சேதங்கள் ஏற்படும் போது..

* பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தில் இருக்கும் போது..

இப்படிப்பட்ட சூழல்களில், விமானத்தை இயக்கும் விமானிகள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே‘ அழைப்பை விடுப்பார்கள்.

Read more: ஏர் இந்தியா கோர விபத்து.. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது இதுவே முதன்முறை..

Next Post

ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பேரும் பலி ?.. உலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது..

Thu Jun 12 , 2025
It has been reported that all passengers on the Air India flight have died.
planecrash 200757 28211 5000 hd big thumb 1

You May Like