விமான நிலையங்களில் பயணிகள் கொண்டு செல்லும் ஆயுதங்களை சோதனை செய்யும் போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. சிறிய கவனக்குறைவுகூட எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கும். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் ஆயுத சோதனையின்போது துப்பாக்கியில் இருந்து திடீரென குண்டு பாய்ந்ததில் 2 பாதுகாப்பு ஊழியர்கள் காயமடைந்தனர். வாரணாசி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை சுமார் 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. உத்தரப் […]

தாய்லாந்து புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் கஞ்சா பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளன. டாடா குழுமத்திற்குச் சொந்தமான இந்த இரண்டு விமான நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட விமானிகள் பணிபுரிகின்றனர். விமானப் போக்குவரத்துத் துறை விதிகளின்படி தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் […]

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 விமானங்கள், பலத்த காற்று மற்றும் கனமழையால் தரைப்பகுதி சேவை உபகரணங்கள் (ground support equipment) அவற்றின் மீது மோதியதில் சேதமடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு விமான நிலையத்தில் திடீரென மோசமான வானிலை நிலவியபோது இந்தச் சம்பவம் ‘டெர்மினல் 2’ பகுதியில் நிகழ்ந்தது. டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் (DIAL) […]

தொடரும் மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில், டெல் அவிவ்-டெல்லி வழித்தடத்தில் தனது விமானச் சேவைகளை ஜூலை இறுதி வரை நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. முன்னதாக, இந்நிறுவனம் ஜூன் இறுதி வரை சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், அப்பகுதியில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து தெளிவு இல்லாததால், இந்த முன்னணி இந்திய விமான நிறுவனம் அந்த வழித்தடத்தில் தனது சேவைகளை மேலும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க […]

மத்திய கிழக்கில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியைத் தணிக்கும் பொருட்டு அமெரிக்கா தற்காலிகமாகத் தடைகளை நீக்கியதைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்போது ஈரானிய கச்சா எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஈரானிய எண்ணெயை வாங்க விரும்பும் இந்திய நிறுவனங்கள், பணம் செலுத்தும் விதிமுறைகள் போன்ற விவரங்கள் குறித்து அமெரிக்க […]

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளரான ஜெனரல் அலி முகமது நயீனி, இஸ்ரேலிய-அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்தப் படை உறுதிப்படுத்தியது. அரசுக்குச் சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம், டெலிகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில், நயீனி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அவரது கருத்துக்களை உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அலி முகமது நயீனியின் மரணம் நிகழ்ந்துள்ளது. […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், போரின் முடிவை […]

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல் ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், இந்த முடிவு தனியாக அவர் எடுக்கும் ஒன்று அல்ல என்றும், பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து “பரஸ்பரமாக” எடுக்கப்படும் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தானும், நெதன்யாகுவும் இல்லையெனில் ஈரான் இஸ்ரேலை முழுமையாக அழித்திருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் பேசிய டிரம்ப், ஈரான் இஸ்ரேலையும் […]

கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் […]

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூர் இன்று சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பாக்பூர், முன்னாள் தளபதி ஹுசேன் சலாமி கொல்லப்பட்ட பின்னர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் சுமார் 260 நாட்கள் ஐஆர்ஜிசி தளபதியாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம், முகமது பாக்பூர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை “எந்தவித தவறான […]