273 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ஏர் இந்தியா விமான விபத்தின் AI கறும்படம் ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 11 ஏ என்ற இருக்கையில் இருந்த விஷ்வாஷ் குமார் மட்டும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட மற்ற அனைத்து விமான பயணிகளும் உயிரிழந்தனர்.
அதேநேரம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் உணவு அருந்திக் கொண்டு இருந்த 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், அதில் 11 பேர் உடல்நலம் அடைந்து வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக மோசமான விமானப் போக்குவரத்து துயரங்களில் ஒன்றாக அகமதாபாத் விமான விபத்து மாறி உள்ளது. இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தி வருகிறது. விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
273 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ஏர் இந்தியா விமான விபத்தின் AI கறும்படம் ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகிறது. கல்வி, குடும்பம், வேலை என பல கனவுகளை சுமந்து கொண்டு வானில் பறந்தவர்கள் வெடித்து சிதறிய வேதனையான காட்சிகளை AI தத்ரூபமாக உருவாக்கியுள்ளது. விபத்தில் பலியான பலரது உடல்களை இன்னும் அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவிக்கும் நிலையில், இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.
Read more: FD சிறந்ததா..? SIP சிறந்ததா..? கடந்த 10 ஆண்டுகளில் எது அதிக வருமானத்தை அளித்தது தெரியுமா..?