அலெர்ட்!. நாளைமுதல் எல்லாம் மாறப்போகுது!. புது ரூல்ஸ்!. 6 முக்கிய பெரிய மாற்றங்கள் இதோ!

june 1st changes 11zon

ஜூன் மாதம் சாதாரண குடிமக்களுக்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் ஜூன் 1 முதல் எல்பிஜி எரிவாயு விலைகள் முதல் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வரை சில முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். எனவே நாளை (ஜூன் 1) முதல் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை இனி பார்க்கலாம். நாளை முதல் கேஸ் சிலிண்டர், ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் பணம் எடுத்தல், ஏடிஎம்-ல் பணம் எடுப்பது என கிட்டத்தட்ட ஆறு வகையான மாற்றங்கள் நிகழவுள்ளது. எனவே நாளை முதல் அமலுக்கு வர இருக்கக்கூடிய ஆறு முக்கிய மாற்றங்கள் குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.


ஒவ்வொரு மாதமும் ஏரிவாயு நிறுவனங்கள் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரா இருந்தாலும் சரி, வணிக பயன்பாட்டுக்கு யூஸ் பண்ணக்கூடிய சிலிண்டரா இருந்தாலும் சரி மாத மாதம் 1 ஆம் தேதி அதன் விலையை நிர்ணயம் செய்றாங்க. அதேபோல ஜூன் ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலை மாற்றம் காணப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இபிஓ என சொல்லக்கூடிய பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருந்தது. தற்போது அது எளிதாக மாற்றப்பட்டு இருக்கிறது. எனவே வரும் ஜூன் 1 ஆம் தேதிக்கு மேல் ஏடிஎம் மூலம் பிஎப் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்க முடியும் எனக் கூப்றபட்டு இருக்கிறது.

கிரெடிட் கார்டு யாரெல்லாம் யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களோ அவங்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வெளியாயிருக்கு. அதாவது ஆட்டோ டெபிட் மூலமா நீங்க பணம் செலுத்தி வருகிறீர்கள் என்றால், அதில் தோல்விகள் ஏற்படும் பட்சத்தில் 2% வரையும் அபராதம் நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும் என சொல்லி இருக்காங்க. இது ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பது குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாயிருக்கு. அதாவது அடிக்கடி ஏடிஎம்-ல் பணம் எடுப்பதாக இருத்தால் எச்சரிக்கையாக இருங்கள். அதாவது ஒரு பர்டிகுலர் பீரியட் வரையும் தான் பணம் இலவசமா எடுக்க முடியும். அதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். ஜூன் 1 ஆம் தேதி முதல் எவ்வளவு கட்டணம் அதிகரிக்க போகிறார்கள் என்பது தெரியக்கூடும். ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரையும் தான் இலவசமா ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம். அத ன்பிறகு ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

Readmore: “உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும் ஏன் மாரடைப்பு வருகிறது”..? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சி காரணங்கள்..!!

KOKILA

Next Post

ஸ்மார்ட் ஃபோனுக்கு ஒட்டியுள்ள டெம்பர் கிளாஸில் இத்தனை தீமைகளா?. இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

Sat May 31 , 2025
ஸ்மார்ட்போன்கள் என்பது தற்போது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. செல்போன் அழைப்புகளுக்கு மடும் இன்றி வங்கி பரிவர்த்தனைகள், ஷாப்பிங், பொழுது போக்கு விஷயங்கள் என அனைத்தையும் உள்ளங்கைக்குள் ஸ்மார்ட்போன்கள் கொண்டு வந்துவிட்டன. செல்போன் புதிதாக வாங்கியவர்கள் உடனடியாக ஸ்கீரின் கார்டு அல்லது டெம்பர் கிளாஸ் பயன்படுத்துவதை பார்க்க முடியும். ஸ்மார்ட் போன்கள் கீழே விழுந்தால் டிஸ்பிளே பாதிக்கப்படாமல் இருக்கவும், டிஸ்பிளேவில் கீறல் போன்றவை ஏற்படாமல் இருக்கவும் இந்த ஸ்கீரின் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் […]
phone tempered glass 11zon

You May Like