தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் மற்றும் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்த வனத்துறை முடிவு செய்துள்ளது
தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023-ம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது, நீர் பறவைகள் மற்றும் நிலப் பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நீர் பறவைகளின் ‘கணக்கெடுப்பானது ஜனவரி மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும்.நிலப் பறவைகளின் கணக்கெடுப்பாணது மார்ச் மாதம் 04 மற்றும் 05 தேதிகளிலும் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நீர் பறவைகளிண் கணக்கெடுப்பிற்காக 20 இடங்களிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக மாவட்டந்தோறும் 20 இடங்களிலும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பறவைகள் கணக்கெடுப்பாணது தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளதால் இதில் பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வில் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அந்தந்த மாவட்ட வன அலுவலகத்தை அணுகி பதிவு செய்து வேண்டும்.