தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் வரும் 19ஆம் தேதி செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் அடுத்த நாளான 25ஆம் தேதி விடுமுறை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 25ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்தது.

இந்நிலையில், அந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.