தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். மே மாதம் தொடக்கத்தில் கத்தரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தற்சமயம் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இத்தகைய நிலையில், கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பது தாமதமாவதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து வருகிறது சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகின்றது. எதிர்வரும் ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் மேலும் 2 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்பதால் பொதுமக்கள் எத்தனை இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.