”மொத்த பேரும் வந்துட்டாங்களே”..!! கும்பலாக திமுகவில் ஐக்கியமான ஓபிஎஸ் அணியினர்..!!

முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஏராளமானோர் திமுகவில் இணைந்து கொண்டனர்.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுக அலுவலகத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க.நகர் வடக்கு பகுதிச் செயலாளர் கே.சிவகுமார் தலைமையில், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.பொற்கொடி, பொதுக்குழு உறுப்பினர் கே.உதயா, மாவட்ட ஐ.டி.விங் பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.பரத் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்து கொண்டனர்.

மேலும், பகுதி இணைச் செயலாளர் ஈ.ஜெய்சிலி, பகுதி பொருளாளர் ஆட்டோ ஏ.குமார், 72வது தெற்கு வட்டச் செயலாளர் பி.என்.ஆனந்தன், 72வது வடக்கு வட்டச் செயலாளர் சென்ட்டிரிங் எஸ்.பார்த்திபன், 72வது மேற்கு வட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாணவர் அணி பகுதி செயலாளர் யூ.ராகுல், 72வது வடக்கு வட்ட துணைச் செயலாளர் ஜி.தேவேந்திரன், 72வது தெற்கு வட்டத்தைச் சேர்ந்த துணைச் செயலாளர் ஆர்.குணா, இணைச் செயலாளர் ஆர்.முருகவம்மாள், பகுதி இளைஞர் அணி செயலாளர் இ.தீபக், பகுதி அம்மா பேரவை செயலாளர் பி.பாரத், 72வது வட்ட துணைச் செயலாளர் எஸ்.பாலாமணி உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.

அப்போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Read More : உடலுறவின்போது அதிக வலி உண்டாகிறதா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!!

Chella

Next Post

எச்சரிக்கை!… 3ம் உலகப் போர் தொடங்கினால்!… அணுஆயுத தாக்குதலை எதிர்கொள்ளும் UK நகரங்கள்!

Tue Apr 16 , 2024
UK: ஈரான் – இஸ்ரேல் போரால் 3ம் உலகப் போர்ட் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அணு ஆயுத தாக்குல் நடந்தால் இங்கிலாந்தில் குண்டுவெடிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள நகரங்கள் அடங்கிய பட்டியலை அந்நாட்டு அதிகாரிகள் தயாரித்துள்ளனர். ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதற்க்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்ததுடன், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை […]

You May Like