100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு…!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில்‌ உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌, ஒரு நிதியாண்டில்‌ உத்தரவாதம்‌ அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில்‌ அதிகபட்சம்‌ 100 நாட்கள்‌ உடலுழைப்பை வழங்கும்‌ மிகப்பெரிய சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்களில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஒன்றாகும்‌. இந்த திட்டத்திற்கு 2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பணிக்கான தேவையின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது. பணிக்களுக்கான நிதித் தேவையின் போது நிதி அமைச்சகத்திடமிருந்து ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இவர்களுக்கு எல்லாம் வேலைவாய்ப்பு பதிவு ரத்து கிடையாது...! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..‌.!

Wed Mar 15 , 2023
தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌. இதன்‌ […]
job tn gov

You May Like