செம வாய்ப்பு..! இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…! 25,000 காலி பணியிடங்கள்…! ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது..

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வங்கி சேவைகள், காப்பீடு, கட்டுமானம் உள்ளிட்ட முக்கியத் துறைகளைச் சோந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 25,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோவு செய்ய உள்ளன.


காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 5, 10, 12 -ம் வகுப்பு படித்தவா்கள், ஐடிஐ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழில் கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உடையவா்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ள நிறுவனங்களும், வேலை தேடுபவா்களும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், 04146-226418 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

தினமும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட்போன் பார்த்தால்.. இந்த நோய்கள் ஏற்படலாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Sat Feb 11 , 2023
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஸ்மார்ட் போன் இல்லாமல் வாழ முடியுமா என்றால் முடியாது என்பதே பதில்.. ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளதுடன், பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஸ்மார்ட்போன் ஆரோக்கியத்திற்கும் நிறைய தீங்கு விளைவிக்கும். ஆம்.. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், பல கடுமையான நோய்களுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போனை பயன்படுத்தினால் உடல் நலம் […]
8 Ways To Prevent Smartphone Addiction In Kids header

You May Like