வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது..
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வங்கி சேவைகள், காப்பீடு, கட்டுமானம் உள்ளிட்ட முக்கியத் துறைகளைச் சோந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 25,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோவு செய்ய உள்ளன.
காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 5, 10, 12 -ம் வகுப்பு படித்தவா்கள், ஐடிஐ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழில் கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உடையவா்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ள நிறுவனங்களும், வேலை தேடுபவா்களும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், 04146-226418 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.