மத்திய அரசின் தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்தில் (NCLT) காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தனிச் செயலாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்:
தனிச் செயலாளர் (Private Secretaries) – 14
சுருக்கெழுத்தாளர் (Stenographers) – 18
சென்னையில் தனிச் செயலாளர் பதவிக்கு 3 மற்றும் சுருக்கெழுத்தாளர் பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் மட்டுமின்றி ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
வயது வரம்பு:
- தனிச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 வயது இருக்க வேண்டும்.
- சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 28 வயது இருக்க வேண்டும்.
- மத்திய அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி:
* விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 100 வாரத்தைகள் என்ற விதம் Dictation மற்றும் கணினியில் ஒரு நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற விதம் Transcription திறன் அவசியமாகும்.
* விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் சுருக்கெழுத்தராக மற்றும் தனி செயலாளராக 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்: சுருக்கெழுத்தாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.45,000 மற்றும் தனிச் செயலாளர் பதவிக்கு மாதம் ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைமுறை:
- விண்ணப்பதாரர்கள் முதலில் திறன் தேர்வு (Skill Test) எழுத வேண்டும்.
- இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள்.
- தேர்வு மற்றும் நேர்காணல் குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களின் மொபைல் எண் & இமெயில் வழியாக அறிவிக்கப்படும்.
- எனவே தொடர்பு எண்களை எப்போதும் செயலில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.
- தேர்வு செய்யப்பட்டவர்கள் முதலில் 1 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
- தேவையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.
- விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://nclt.gov.in/ என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: அக்டோபர் 8-ம் தேதியே கடைசி நாள் ஆகும்.
Read more: பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் டபுள் மடங்கு பலன் உறுதி.. ட்ரை பண்ணி பாருங்க..!!