கொரோனா லாக்டவுன் காலத்தில் குடும்பத்திற்காக தனி விமானத்தையே தயாரித்த இந்தியர்..!!

உலகையே வீட்டிற்குள் முடக்கிப்போட்ட கொரோனா பேரிடர் காலத்தில் குடும்பதிற்கென பிரத்யேகமாக சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார் லண்டனில் வாழும் இந்திய வம்சாவளி இளைஞர்.

கொரோனா லாக்டவுன் காலத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் வீட்டிற்குள் முடங்கிய பலரும், யூடியூப் பார்த்து புது புது உணவுகளை தயாரித்து ருசித்து மகிழ்ந்த போது, லண்டனில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் என்பவர் அதே யூடியூப் உதவியுடன் குடும்பத்திற்காக பிரத்யேகமாக விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவை பூர்விகமாக கொண்ட அசோக், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டில் பொறியாளராக பணிபுரிகிறார். கொரோனா ஊரடங்கில் ஆலைகள் முடங்கியதால் கிடைத்த கால அவகாசத்தில் வீட்டிலிருந்த படியே விமான தயாரிப்பு கையேடுகள், யூடியூப் வீடியோக்கள் ஆகியவற்றை கொண்டு சிறிய ரக விமானத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

லாக்டவுன் காலத்தில் குடும்பத்திற்காக தனி விமானத்தையே தயாரித்த இந்தியர்..!!

பல்வேறு கட்ட தரப்பரிசோதனைகளுக்கு பிறகு முறையான அனுமதி கிடைத்ததும் தாமே தயாரித்த சிறிய ரக விமானத்தில் மனைவி, இரண்டு மகள்களுடன் ஐரோப்பாவை வளம் வர தொடங்கிவிட்டார். இதுவரை, ஜெர்மனி, ஆஸ்திரியா, செக்குடியரசு ஆகிய நாடுகளை அவர் வளம் வந்துவிட்டார். ஒன்றரையாண்டு கால உழைப்பை கொட்டி சுமார் 1.8 கோடி ரூபாய் செலவில் குடும்பத்திற்காக தனி விமானத்தையே அசோக் உருவாக்கியுள்ளார்.

லாக்டவுன் காலத்தில் குடும்பத்திற்காக தனி விமானத்தையே தயாரித்த இந்தியர்..!!

தனிப்பட்ட பயணத்திற்கென ஏற்கனவே சிறிய ரக விமானங்கள் இருக்க ஏன் இந்த முயற்சி என்று கேட்டபோது, அவை பெரும்பாலும் இரண்டு இருக்கைகள் கொண்டவை என்பதால் மனைவி, இரண்டு மகள்களுடன் ஒன்றாக பயணிப்பதற்காகவே நான்கு இருக்கைகள் கொண்ட விமானத்தை வடிவமைத்ததாக கூறினார். இன்று தன் விருப்பப்படி தாமே உருவாக்கிய விமானத்தில் குடும்பத்துடன் ஐரோப்பாவை உற்சாகமாக வலம் வருகிறார் அசோக்.

Chella

Next Post

பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் ரூ.256 உயர்ந்த தங்கம் விலை..

Thu Jul 28 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்குரூ.256 அதிகரித்து, ரூ.38,136-க்கு விற்பனையாகிறது…. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.. […]
gold

You May Like