நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ஆவணப்படம், Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.. இந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.. அதில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் இது தொடர்பாக தனுஷின் வொண்டர்பார்ஸ் நிறுவனம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தது.. இந்த வழக்கின் விசாரணை தற்ப்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது..
இந்த நிலையில் நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சந்திரமுகி காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.. அனுமதியின்றி சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது..
இதுகுறித்து ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதில் தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையையும் தள்ளி வைத்துள்ளது. ஏற்கனவே தனுஷ் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கு உள்ள நிலையில் மேலும் ஒரு நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் நயன்தாராவுக்கு சிக்கல் அதிகமாகி உள்ளது.