#திருப்பூர் :நண்பர் இறந்த செய்தியை கேட்ட மற்றொரு நண்பர் மாரடைப்பால் இறந்த சோகம்..!

திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மண்ணரில் சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஹோட்டல் ஒன்றில் காசாளராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்றைய முன்தினத்தில் காலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். 


பேருந்து நிறுத்தத்திலிருந்து ரோட்டினை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து மோதப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

இதனை தொடர்ந்து தனியார் பேருந்தில்  முன்பாக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்ததில் அவர் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டை கடக்கும் போது பேருந்து முன் கீழே விழுந்ததில் அவர் மீது பேருந்து ஏறியுள்ளது என தெரியவந்துள்ளது.

இத‌னிடையே சுப்பிரமணியன் தனது நெருங்கிய சினேகிதனான சுப்ரமணியத்துடன் தினமும் நடைபயிற்சி செல்வார் என்றும் இவர் இறந்த செய்தியை கேட்ட நிலையில், சென்ற வாரம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர் இறந்த செய்தியை கேட்ட சோகத்தில் இவ்வாறு இவர் இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். 

1newsnationuser5

Next Post

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி..!! உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவன்..!! மீண்டும் கொடூரம்..!!

Thu Nov 24 , 2022
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள குலாரிஹாவ் பகுதியில், கடந்த நவம்பர் 8ஆம் தேதி அன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக ராம்பூர் கலன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார், பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட […]
Death e1669278056181

You May Like