சென்னையில் கொரோனாவால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு..? மீண்டும் அமலுக்கு வருகிறதா இரவு நேர ஊரடங்கு..? பீதியில் மக்கள்..!!

Corona 2025

தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 60 வயது முதியவர் உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், சேலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா மற்றும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் தான், சென்னையிலும் நேற்று 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 189 பேர் சிகிச்சையில் உள்ளனர். 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருவதால், இதனை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..? என்று மக்கள் அச்சப்படுகின்றனர். ஆனால், அதேபோன்ற ஒரு முடிவு தற்போது வரை அரசு எடுக்கவில்லை என்றே தெரிகிறது.

Read More : பெண்களே ரெடியா..? ரூ.1,000 பணத்திற்கு விண்ணப்பிக்க நாளை சூப்பர் வாய்ப்பு..!! இந்த ஆவணங்களை மறக்காமல் எடுத்துட்டு போங்க..!!

CHELLA

Next Post

இனி இந்த ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. எந்தெந்த மாடல் தெரியுமா..?

Tue Jun 3 , 2025
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மெசஞ்சர், இனி சில பழைய ஸ்மார்ட்போன்களில் இயங்காது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த மாற்றம் மே 2025-ல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் ஏற்பட்ட சிறிய தாமதம், பயனர்களுக்கு தங்கள் போன்களை மாற்றிக்கொள்ள கூடுதல் அவகாசத்தை அளித்தது. அதன்படி ஜூன் 1 முதல் சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படவில்லை. இது மெட்டாவின் […]
whatsapp jpg

You May Like