எவரேனும் லஞ்சம் கேட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என மத்திய புலனாய்வு துறை அனைத்து மொபைல் எண்களுக்கும் விழிப்புணர்வு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.
ஒவ்வொரு துறைகளிலும் லஞ்சம் இல்லாமல் எந்தவேலையும் நடப்பதில்லை. அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில இடங்களில் மட்டுமே லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபடுகின்றனர். எனவே லஞ்சம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் மொபைல் போன்களுக்கு விழிப்புணர்வு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய புலனாய்வு துறை அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் கூறியதாவது, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். பொதுத்துறை வங்கி மற்றும், மத்திய அரசு ஊழியர்கள், எவரேனும் லஞ்சம் கேட்டால் உடனே கீழ்கண்ட முகவரியில் தகவல் தெரிவிக்கவும். மத்திய புலனாய்வு துறை சாஸ்திரி பவன், நுங்கம்பாக்கம் , சென்னை-06, தொலைபேசி எண். 044-28273186.28270992, 9445160988 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.