குட் நியூஸ்..! போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல்…!

Bus 2025

போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வின் மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420ல் முதல் |அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்கும். நிலுவைத் தொகையை 2024 செப்டம்பர் 1 முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27 அன்று 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஸ் ஆகிய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதனையடுத்து அரசு தரப்பில் இருந்து மே 29 அன்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் பொழுது போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வின் மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420ல் முதல் |அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்கும். நிலுவைத் தொகையை 2024 செப்டம்பர் 1 முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More: விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…! இனி 15 நாட்களுக்கு ஒருமுறை முகாம்…! தமிழக அரசு தொடங்கிய புதிய திட்டம்…!

Vignesh

Next Post

தீயாய் பரவும் கொரோனா..!! 28 நாட்களில் 91,583 பேர் பாதிப்பு..!! முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்..!! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!!

Fri May 30 , 2025
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்பின், கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை […]
Corona 2025 4

You May Like