ப்ளே ஸ்டோர் செயலியால் ஆபத்து.. வங்கி தகவல்கள் திருடப்படும் அபாயம்..!! தடுப்பது எப்படி..?

20 Dangerous Apps

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்குவது கூட பாதுகாப்பு இல்லை என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தற்போது, SparkKitty எனப்படும் தீம்பொருள், சுமூகமாக இயங்கும் செயலிகள் உருவத்தில் நுழைந்து, பயனர்களின் புகைப்படங்கள், கிரிப்டோ பணப்பைகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடுகிறது.


இந்த செயலிகள் புதிய மற்றும் பிரபலமானவை போல தோன்றும்; ஆனால், அதற்குள்ளே தீம்பொருள் மறைந்திருக்கும். நீங்கள் இந்த செயலிகளை நிறுவும்போது, “புகைப்பட கேலரியை அணுக அனுமதி” கேட்கும். பெரும்பாலானோர் கவனிக்காமல் அனுமதி அளித்து விடுகிறோம்.

ஒருமுறை அனுமதி வழங்கியதும், SparkKitty உங்கள் புகைப்பட கேலரியை ஸ்கேன் செய்யும். இதில் OCR (Optical Character Recognition) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் உங்கள் கிரிப்டோ வாலட் (Crypto Wallet) விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்திருந்தால், அல்லது பேங்க்/அடையாள ஆவணங்களை புகைப்படமாக வைத்திருந்தால், அவை அனைத்தும் திருடப்பட்டு, உங்கள் பணம் திருட்டு போலகால்ம்.

ஆபத்து எங்கே பரவுகிறது?

* திருடப்பட்ட தகவல்கள் நேரடியாக ஹேக்கர்களின் சேவையகங்களுக்கு அனுப்பப்படும்.

* இந்த வைரஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் வேலை செய்கிறது.

* அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர் மட்டுமல்ல, மூன்றாம் தரப்பு தளங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன.

* ஏதேனும் புதிய புகைப்படங்கள் வந்துள்ளதா என்று பார்க்க உங்கள் கேலரியை தொடர்ந்து சரிபார்க்கிறது.

இந்த ஆபத்தை எவ்வாறு தவிர்ப்பது?

1. ஒரு செயலியைப் பதிவிறக்குவதற்கு முன் சிந்தியுங்கள். டெவலப்பர்கள் மற்றும் மதிப்புரைகள் நம்பகமானவையாக இருக்கும் செயலிகளை மட்டும் நிறுவவும்

2. அனுமதிகளில் கவனம் செலுத்துங்கள். ஒரு செயலி உங்கள் புகைப்படங்கள், கோப்புகள் அல்லது கேமராவிற்கான அணுகலை ஏன் கேட்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்

3. புகைப்படங்களில் கிரிப்டோ விவரங்களைச் சேமிக்க வேண்டாம். கடவுச்சொற்கள் அல்லது மீட்பு சொற்றொடர்களின் ஸ்கிரீன்ஷாட்களை ஒருபோதும் எடுக்க வேண்டாம்

4. வைரஸ் தடுப்பு செயலிகளைப் பயன்படுத்தவும். அத்தகைய தீம்பொருளை அடையாளம் காணக்கூடிய நம்பகமான பாதுகாப்பு செயலியை உங்கள் தொலைபேசியில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த வகை வைரஸ் உங்கள் கிரிப்டோ பணப்பை தகவல்களை மட்டும் எடுத்துக்கொள்வதில்லை, உங்கள் தனிப்பட்ட புகைப்படங்களையும் கசியவிடும். இதுவரை எந்த அச்சுறுத்தல் வழக்கும் பதிவாகவில்லை, ஆனால் ஆபத்து இன்னும் உள்ளது.

Read more: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை.. அரசின் சூப்பர் திட்டம்.. ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

Next Post

விஸ்வரூபம் எடுக்கும் போதை பொருள் வழக்கு.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து.. அடுத்தடுத்து சிக்கப் போகும் பிரபலங்கள்..?

Thu Jun 26 , 2025
போதை பொருள் வழக்கில் தமிழ் திரையுலகில் மேலும் பலர் சிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் […]
517544 drugscandal

You May Like