ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீஸ்..!! கூச்சலிட்ட ரசிகர்கள்..!! வைரல் வீடியோ..!! பெரும் பரபரப்பு..!!

புனேவில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜ்பகதூர் மில்ஸ் பகுதி அருகே திறந்தவெளியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். மாலை முதல் நடந்து வந்த இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. இரவு 10 மணியை நெருங்கியதும் ஏ.ஆர்.ரஹ்மான் ‘தில் சே’ படத்தில் இடம்பெற்ற ‘சைய்ய சைய்யா’ பாடலை பாடத் தொடங்கிய போது போலீஸ் ஒருவர் மேடையின் மீது ஏறி தன்னுடைய வாட்ச்சை காண்பித்து நிகழ்ச்சியை நிறுத்தும்படி சைகை செய்தார்.

சில இசைக் கலைஞர்கள் அதனை கவனிக்காமல் இசைத்துக் கொண்டிருந்தனர். இதனால், அவர்கள் அருகில் சென்ற போலீஸ்காரர், உடனடியாக இசைப்பதை நிறுத்துமாறு கூறினார். இதனைக் கண்ட அங்கிருந்த ரசிகர்கள், கத்தி கூச்சலிட்டனர். பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் போலீசாரின் வலியுறுத்தலுக்கு இணங்கி மேடையில் இருந்து இறங்கினார். இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தினிடையே சலசலப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

மயிலாடுதுறையில் காணாமல் போன கோவில் சிலைகள்…..! அமெரிக்க மியூசியத்தில் கண்டுபிடிப்பு…….!

Tue May 2 , 2023
தமிழகத்தில் கும்பகோணம் சரகத்தில் உள்ள தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற பழமையான கோவில்களுக்கு சொந்தமான சேலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிறப்பு தணிக்கை செய்து வருகிறார்கள். அந்த விதத்தில், கடந்த மாதம் 15 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை கிராமத்தில் தர்மபுரம் நிர்வாகத்தில் உள்ள அருள்மிகு விரட்டேஸ்வரர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடிப்பு பிரிவு காவல்துறையினர் […]
idiel

You May Like