அரபு நாடு To கேரளா – வாக்களிக்க பறந்து வந்த 30,000 பேர்..!

கேரளாவில் ஒரே கட்டமாக 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காகவே அரபுநாடுகளில் இருந்து 30,000 பேர் கேரளா திரும்பியுள்ளனர்.

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2வது கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 26) 89 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்தது. கேரளாவில் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவைப் பொறுத்தவரையில் அரபு நாடுகளில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலின் போதும் தவறாமல் வாக்களிக்க வருகை தந்து ஜனநாயகக் கடமையை செய்துவிட்டு திரும்புகின்றனர். தற்போது ஒரே கட்டமாக கேரளாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் கடந்த சில வாரங்களாக அரபு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்புவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில் சுமார் 30,000 பேர் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More: PMO Modi| “காங்கிரஸ்காரர்கள் இளவரசர்கள்; நான் ஏழையின் மகன்…” ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்.!!

Baskar

Next Post

மத்திய ஆயுதப்படையில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! பெண்களும் விண்ணப்பிக்கலாம்..!! சூப்பர் வாய்ப்பு..!!

Fri Apr 26 , 2024
மத்திய ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 506 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு டிகிரி முடித்த ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வெவ்வேறு படைப்பிரிவுகள் உள்ளன. இந்த படைப்பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், யுபிஎஸ்சி எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் மத்திய போலீஸ் ஆயுதப்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு […]

You May Like