திரைத்துறையில் உறவுகளும் பிரிவுகளும் புதிதல்ல என்றாலும், சமீபத்திய ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான தனுஷும், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற வதந்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே யூகங்கள் நிலவி வருகின்றன. அந்த வகையில் தற்போது தனுஷ் – மிருணாள் தாக்கூர் இந்த ஆண்டு பிப்ரவரி 14, அதாவது காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தனுஷுக்கும் மிருணாள் தாக்கூரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் முதன்முதலில் 2025 ஆகஸ்ட் மாதம் வெளியானது. மிருணாள் நடித்த ‘சன் ஆஃப் சர்தார் 2’ திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டது அப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர், தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு விழாவில் மிருணாள் காணப்பட்டபோது, இந்த சந்தேகங்கள் மேலும் வலுப்பெற்றன.
மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மிருணாள் தாக்கூர் சமூக வலைத்தளங்களில் தனுஷின் சகோதரிகளைப் பின்தொடர்கிறார். இதைக் கவனித்த நெட்டிசன்கள், ‘அவர்களின் உறவு பற்றி குடும்பத்தினருக்குத் தெரியுமா? விஷயம் அந்த அளவுக்குச் சென்றுவிட்டதா?’ போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த சூழலில் தான் தனுஷ் மற்றும் மிருணாள் திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மட்டுமே திருமணத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், இது குறித்து தனுஷோ அல்லது மிருணாளோ இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
முன்னதாக, தாங்கள் காதலிப்பதாக வெளியான செய்திகளை மிருணாள் மறுத்திருந்தார். தனுஷ் தனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே என்று அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், இருவரின் எண்ணங்களும் மதிப்புகளும் ஒத்திருந்ததால், அவர்கள் விரைவாக ஒருவருக்கொருவர் நெருக்கமானார்கள் என்றும், அவர்களின் நட்பு தற்போது மிகவும் வலுவாக இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருந்தார். கிட்டத்தட்ட 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, 2022-ல் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 2024-ல் அவர்களின் விவாகரத்து நடைமுறைகள் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழ்நிலையில், தனுஷ் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



